கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை-முதலமைச்சர். கரூர் சூழ்நிலையை பயன்படுத்தி, விஜயை தங்கள் அணிக்கு கொண்டு வர பா.ஜ., முயற்சி எடுத்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கேட்க மாட்டோம்'-சண்முகம், மா நில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ. செப்.17-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "உச்ச நீதிமன்றம் கரூர் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்பதை உறுதியோடு நான் சொல்கிறேன். அதேநேரத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும் பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம்"முதல்வர் .

Adithya Tamil FM

Time played 00:00

REQUEST YOUR ADS

Ad Form Image